​நாடு திரும்பிய 578 பேர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்

வௌிநாடுகிளில் இருந்து இலங்கை வந்த 578 இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என பதில் இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் ஷவேந்திர சில்வா சிங்கள மொழி மூல தேசிய நாளிதழான லங்காதீபவுக்கு தெரிவித்துள்ளார்.

இவர்களில் 359 பேர் குவைத்திலிருந்து வந்தவர்களாவர். வௌிநாடுகளில் இருந்து இதுவரை 6500 பேருக்கும் அதிகமானவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தலில் 5282 பேர் உட்படுத்தப்பட்டுள்ளனர். அதற்காக 43 தனிமைப்படுத்தல் நிலையங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தலில் வௌிநாடுகளில் இருந்து இலங்கை வந்தோர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் இராணுவ தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435