17 அமைப்புகள் இன்று நள்ளிரவு முதல் நாடளாவியரீதியில் போராட்டம்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் அரச நிர்வாக அதிகாரிகளின் ஒன்றியம் உள்ளிட்ட 17 அமைப்புகள் இன்று நள்ளிரவு முதல் நாடளாவியரீதியில் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளன.

வேதன முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது என்று அந்த அமைப்புகள் தெரிவித்தன.

தங்களது வேதன பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை தீர்வைப் பெற்றுக்கொடுக்கவில்லை என குறித்த சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முன்னதாக பல தடவைகள் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டதையடுத்து, உரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையிலும், தங்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காதமையினால் இன்று நள்ளிரவு முதல் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அந்த சங்கங்கள் தெரிவித்துள்ளன.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435