50 ரூபா கொடுப்பனவு இந்த மாதமும் கிடைக்காது?

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்ககான 50 ரூபா நாளாந்த மேலதிக கொடுப்பனவு எதிர்வரும் 10ம் திகதி கிடைக்கும் என்று உறுதியாக கூற முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை லொக்கீல் தோட்டத்தில் நீண்டகாலமாக செப்பணிடப்படாமல் இருந்த தோட்ட குடியிருப்புக்கு செல்லும் வீதி கம்பெரலிய திட்டத்தின் ஊடாக 30 இலட்சம் ரூபா செலவில் பாதை செப்பணிடப்பட்டு அமைச்சர் இராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான 50 ரூபா கொடுப்பனவு நிலுவை கொடுப்பனவுடன் வழங்குவது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

தொழிலாளர்களின் 50 ரூபா கொடுப்பனவு எதிர்வரும் 10ம் திகதி கிடைக்கும் என்று உறுதியாக கூற முடியாது. ஆனால் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

”தமிழ் முற்போக்கு கூட்டணியின் அழுத்தத்துக்கு அமைவாக, 50 ரூபாய் நாளாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் இணங்கியுதுடன், அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்திருந்தது.

ஆனால் இந்த விடயத்தில் அமைச்சர் ஒருவர் தடையாக இருப்பதனால் இன்னும் இழுத்தடிப்பாகவே இருக்கின்றது. தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றது. எதிர்வரும் காலங்களில் நிச்சயமாக 50 ரூபா கொடுப்பனவை தமிழ் முற்போக்கு கூட்டணி பெற்றுக் கொடுக்கும் என்று அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435