567 போஷாக்கு நிபுணர்களுக்கு விரைவில் நியமனம்

போஷாக்கு துறைசார் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த 567 பட்டதாரிகள் விரைவில் சேவையில் இணைத்துக்கொள்ள சுகாதாரம், போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட துறையில் பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களே இச்சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளார்கள்.

போஷாக்குத்துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் புதிய போஷாக்கு நிபுணர்களை இணைத்துக்கொள்வதற்கான அமைச்சரவை அனுமதியை பெறுவதற்கான பத்திரத்தை தயாரிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

தற்போது 25 போஷாக்கு நிபுணர்கள் சேவையில் உள்ளனர். போஷாக்கு தொடர்பில் மக்களை தௌிவுபடுத்துவதற்கு குறித்த எண்ணிக்கை போதாது என்பதனால் புதிய நிபுணர்களை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

போஷாக்கு நிபுணர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் ஒன்றின் போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.

dgi

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435