729 பட்டதாரிகள் விரைவில் சேவையில்

அரச பாடசாலைகளில் வௌிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் நேற்று முன்தினம் சமர்ப்பித்த யோசனைக்கு அமைய 729 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான அனுமதியை  அமைச்சரவை   வழங்கியுள்ளது.

அரச பாடசாலைகளில் வௌிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான சந்தர்ப்பங்களை விரிவுபடுத்துதல்,  வௌிநாட்டு மொழிகளை கற்பிக்கும் பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், தற்போது பாடசாலைகளில் உள்ள மொழிக்கூடங்களை சிறப்பாக பயன்படுத்துதல் உட்பட பல நோக்கங்களுடன் மொழி ஆசிரியர்கள் ஆசிரியர் சேவையில் உள்வாங்கப்படவுள்ளனர்,

பட்டதாரிகளை சேவையில் உள்வாங்குவதற்கான அனுமதியை முகாமைத்துவ சேவைகள் திணைக்களமும் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது வௌிநாட்டு மொழிகள் கற்பிக்கப்படும் தேசிய பாடசாலைகளிலும் எதிர்காலத்தில் கற்பிக்க உத்தேசித்துள்ள தேசிய பாடசாலைகளிலும் இப்பட்டதாரிகள் சேவைக்கு அமர்த்தப்படவுள்ளனர்.

பிரான்ஸிய மொழி, ஜெர்மனிய மொழி, ஹிந்தி, ஜப்பான், அரபி மற்றும் கொரிய ஆகிய மொழிகளை கற்பிப்பதற்கு இப்பட்டதாரிகள் உள்வாங்கப்படவுள்ளனர்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435