வினைத்திறனுக்கமைவாகவே இனி அரச ஊழியர்களுக்கு பதவியுயர்வு!

அரச துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பதவியுயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு புதிய முறையினை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்று அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.


கடந்த 25ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அரச ஊழியர்களின் வினைத்திறனை கருத்திற்கொண்டே இந்த பதவி உயர்வு வழங்ககப்படும் என்று சுட்டிக்காட்டிய அவர், நேர்மையான முறையில், திட்டமிட்டு ஒழுங்குப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் நடைமுறையில் இருந்த சேவைக்காலத்திற்கமைவாக பதவி உயர்வு வழங்கும் முறையை ரத்து செய்வதுடன் அரச துறையை நவீனமயப்படுத்தலுடன் இம்மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன என்றும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435