சொந்த ஊர் செல்ல மேல் மாகாணத்தில் காத்திருப்பவர்களுக்கான அறிவித்தல் 

சுகாதாரதுறையின் கோரிக்கைப்படி, மேல்மாகாணத்தில் தங்கியுள்ள வெளிமாவட்ட மக்களை எதிர்வரும் 20ம் திகதிவரை சொந்த ஊருக்கு அனுப்புவதில்லை என அரசாங்கம் நேற்று முடிவு எடுத்துள்ளதாக, கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் விஜயதாச ராஜபக்ச தன்னிடம் தெரிவித்தார் என முன்னாள் எம்.பி மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளர்.  அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இது தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன், இன்று அல்லது நாளை நாம் கலந்துரையாட உள்ளோம்.

எது எப்படி இருந்தாலும், தமது சொந்த ஊர்களுக்கு செல்லும்வரை இவர்களுக்கு, வாழுமிடங்களில் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435