அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பில்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (12) தொடக்கம் 15ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியாக சேவைப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.


அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இன்று ஆரம்பமாகும் இந்த சேவைப்புறக்கணிப்பு போராட்டம் மாவட்ட ரீதியாக மேற்கொள்ளப்படும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய இன்று யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, நுவரெலியா பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளனர்.

சைட்டம் பிரச்சினையை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழுவின் நிலைப்பாட்டுக்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435