ஆடைத் தொழிற்சாலையில் மோதல்

மாத்தளையில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் சிலர் இன்று (14) ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

தொழிற்சாலையின் மனித வள திணைக்களம் ஒழுங்காக சம்பளம் வழங்கவில்லை என்று கூறியே இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டித் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தமது சம்பளத்தை உயர்த்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த தொழிற்சாலையில் சுமார் 850 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் என்றும் தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரையில் போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த தொழிற்சாலையின் மனித வள முகாமைத்துவ பிரிவு ஊழியர்களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றமையினால் பொலிஸார் தலையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435