பட்டதாரிகள் சேவையில் இணைப்பது தொடர்பான அமைச்சரவைத் தீர்மானம்

வேலையற்ற பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கான முதற்கட்ட நடவடிக்கையில் 4800 பேரை மட்டுமே இணைத்துக்கொள்ள அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுமுன்தினம் (26) கூடிய அமைச்சரவையில் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அண்மையில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வில் 25 புள்ளிகளுக்கு அதிகமாக பெற்ற பட்டதாரிகளை முதற்கட்டமாக அரச சேவையில் இணைத்துக்கொள்ள இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கான திட்டத்திற்கு 66000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாகவும் எனினும் சுமார் 38000 பேர் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு சமூகமளித்ததாகவும் மேற்படி விடயம் தொடர்பில் அமைச்சரவைக்கு விளக்கமளித்த பிரதமர் ரணில்விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

நேர்முகத்தேர்விற்கு சமூகமளித்தவர்களில் 4800 பேர் மட்டுமே 25 புள்ளிகளுக்கும் அதிகமாக பெற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்- லங்காதீப

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435