திருகோணமலையில் வேலையில்லா பட்டதாரிகள் நியமனம்கோரி போராட்டம்

திருகோணமலை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்
கிண்ணியா டாக்டர் ஹில்மி நட்பு பூங்காவின் முன்றலில் இன்று (04)  இடம்பெற்றது.

நூற்றுக்கும் அதிகமான பட்டதாரிகள் கலந்து கொண்டன்.

“வெளிவாரி பட்டதாரிகளை புறக்கணிக்காதே, அரச நியமனத்தில் பட்டதாரிகளுக்கு உள்வாரி வெளிவாரி என பாகுபாடு காட்டாதே, ஆளும் ஐக்கிய தேசிய கட்சி அரசே வெளிவாரி பட்டதாரிகளூக்கும் நியமனம் வழங்கு ” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் வெளிவாரி பட்டதாரிகள் கவனயீர்ப்பில் ஈடுபட்டார்கள்.

தங்களுக்கான நியமனங்களை விரைவாக வழங்கக் கோரியும் பட்டதாரிகளுக்கு பாகுபாடு காட்டாமல் இந்த ஆளும் அரசாங்கம் நியமனங்களை வழங்க வேண்டும் என கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்கள்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435