LJEWU தலைவராக செய்யப்போவது என்ன? நவீன் விளக்கம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுக்கு நான் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. இனியும் இருக்கப்போவதில்லை – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொத்மலையில் நேற்று (27) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்  உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமானது கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாகவே நிர்ணயிக்கப்படுகின்றது. இது விடயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் பெருந்தோட்டத்துறை அமைச்சுக்கு கிடையாது. இதன்காரணமாகவே கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பணிகள் இடம்பெறவேண்டும் என கூறினேன். மாறாக தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கு நான் தடையாக இருக்கவில்லை. ஆயிரம் ரூபா கிடைத்திருந்தால் நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பேன்.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் (LJEWU) தலைமைப்பதவி கடந்தவாரம் தான் எனக்கு வழங்கப்பட்டது. இனிவரும் காலங்களில் ஒரு தொழிற்சங்க தலைவராக நான் போராடுவேன். தொழிலாளர்களுக்காக பேசவேண்டிய பொறுப்பும் எனக்கு இருக்கின்றது என நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்

செய்தியாளர் – க.கிஷாந்தன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435