UAEயில் இருந்து மேலும் 278 பேர் இலங்கைக்கு

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றி வந்த இலங்கையர்கள் 278 பேர் இன்று (10) நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

தொழில் நிமித்தம் ஐக்கிய அரபு இராச்சியம் சென்ற குறித்த இலங்கையர்கள் கொரோனா வைரஸ் காரணமாக இன்று (10 ) அதிகாலை 4.50 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்தனர்.

மேலும், ஜப்பானிலிருந்து ஐந்து பேரும் வௌிநாட்டு கப்பல் ஒன்றில் பணியாற்றி வந்த 24 பேர் கட்டாரில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து குறித்த அனைவருக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435