வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பிய மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் 6 பேருக்கு நேற்று (25) கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு நேற்றிரவு இறுதியாக கொவிட்-19 தொற்று உறுதியானது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் சென்னையில் இருந்து நாடுதிரும்பிய நிலையில்  தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 4 பேருக்கும், பெலருஸில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும் வைரஸ் தொற்று உறுதியானது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 770 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 9 பேர் நேற்று குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 103 ஆக அதிகரித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் 656 தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றிரவு 10.45 மணிக்கு வெளியிட்ட கொவிட்-19 நிலவர அறிக்கை கீழே…

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435