அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகம்

அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமை பதவியிலிருந்து ராமலிங்கம் சந்திரசேகரன் ராஜினாமா செய்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக செயற்பட்ட ராமலிங்கம் சந்திரசேகரன் நேற்று (25) ஹட்டன் நகரில் நடைபெற்ற சங்கத்தின் 10ம் ஆண்டு விழாவில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

யாழ் பிரதேசத்தில் பணியாற்ற வேண்டியுள்ளமை மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் உள்ள தடைகள் என்பவற்றை கருத்திற்கொண்டு இவ்ராஜினாமாவை அறிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய குறித்த தொழிற்சங்கத்தில் புதிய அதிகாரிகள் குழு தெரிவு செய்யப்பட்டுள்ளாக அறிய முடிகிறது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435