அதிபர் – ஆசிரியர்கள் திட்டமிட்டிருந்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் அனைத்திலும் முன்னெடுக்கப்படவிருந்த பணிநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பள முரண்பாடுகள் தொடர்பாக அமைச்சரவை வழங்கிய தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு உட்பட பல கோரிக்கைகளை  முன்வைத்து கடந்த மாதம் 26, 27 ஆம் திகதிகளில் அதிபர்களும்,  ஆசிரியர்களும் நாடளாவிய ரீதியில்  சுகவீன விடுமுறை  போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த போராட்டத்தை அடுத்து  ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற  அவசர அமைச்சரவை கூட்டத்தில் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு  காண்பதற்காக அமைச்சரவை  உபகுழு நியமிக்கப்பட்டது.

இந்த நிலையில் அமைச்சரவையின் உபகுழுவிற்கும் அதிபர், அசிரியர்  தொழிற்சங்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கு  அமைய உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

அதனை  கருத்திற்கொண்டு, எதிர்வரும் தினங்களில் முன்னெடுக்க  தீர்மானித்திருந்த தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தினை  தற்காலிகமாக கைவிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னதாக அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் – அமைச்சரவை உபகுழுவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் நிறைவில் – தொழிற்சங்கங்களுக்கு உத்தரவாதக் கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

ஆசிரியர்இ அதிபர் சேவைகளிலிருக்கும் சம்பள முரண்பாடுகளை தீர்த்தல்

அதிபர்இஆசிரியர் சேவையிலிருக்கும் சம்பள முரண்பாடு தொடர்பாக 2019.09.30 திகதி திறைசேரியில் நடந்த கலந்துரையாடலில்

2. 2019.09.27 நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி – சம்பந்தப்பட்ட தொழிற்சங்கத்துடன் கலந்துரையாடி – அமைக்கப்பட்ட அமைச்சரவை குழுவினால் அதிபர் ஆசிரியர் சம்பள பிரச்சினை சம்பந்தமாக தீர்வு காணும்படி பரிந்துரைத்தல்-

1. கௌரவமான ஒரு உத்தியோகமாக கருதப்பட்டு அதிபர்இ ஆசிரியரின் சேவைகளுக்கான                     ஆரம்ப சம்பளநிலை கொடுக்கப்படவேண்டியது அவசியமாகும்.

2. முதலாவது கட்டமாக ஆசிரியர் சேவையை ஒன்றிணைந்த சேவையாக மாற்றி –                                    அதற்கு முறையான சம்பளதிட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு ஆணைக்குழு ஒன்றை                              நியமித்தல்.

3. இந்த பரிந்துரை 2019.10.01 நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கின்றோம்.

என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435