அதிபர் நியமனங்களுக்கான நேர்முகப்பரீட்சை 23 முதல் ஆரம்பம்

278 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்காக உரிய தகுதியைக் கொண்டவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கல்வி , விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவினால் சம்பந்தப்பட்ட பிரிவிற்கு இதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

278 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்காக அரச சேவை ஆணைக்குழுவின் கல்வி சேவைக்குழு உரிய வகையில் இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்றில் தகுதி பெற்ற அதிகாரிகளிடம் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

இதற்கான நேர்முக பரீட்சை டிசம்பர் மாதம் 23,24,26,27 மற்றும் 28 ஆம் திகதிகளில் கல்வி அமைச்சில் நடைபெறவுள்ளது.

இதன் கீழ் வெற்றிடங்கள் நிலவும் பாடசாலைகளின் எண்ணிக்கைக்கு அமைவாக அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிபர்களாக நியமிப்பதற்காக தெரிவு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் தமது விருப்பத்திற்கு அமைவாக பாடசாலைகள் சிலவற்றை குறிப்பிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதிபர் பதவி வழங்கும் பொழுது அவர்களது இந்த விருப்பத்தை கவனத்தில் கொள்வதற்கு எதிர்பார்த்திருப்பதாக கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435