அபாயா, ஹிஜாப் அணிய அனுமதி கோரி உச்ச நீதிமன்றில் மனு

பாடசாலைக்கு அபாயா அல்லது ஹிஜாப் அணிந்து செல்வதற்கு பாடசாலை நிருவாகமும் அரசும் தடை விதித்துள்ளமையை இடைநிறுத்தி உத்தரவிடுமாறு பாடசாலை ஆசிரியை ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த மனு எதிர்வரும் செப்டம்பர் 04 ஆம் திகதி உச்ச நீதிமன்ற நீதியரசர்களான சிசிர டி ஆப்ரு, முருது பெர்ணான்டோ, எஸ்.துரைராஜா ஆகியோர் தலைமையில் விசாரிக்கப்படவுள்ளது.

கண்டியைச் சேர்ந்த ஆசிரியையான மொஹமட் இப்ராஹிம் பாத்திமா சஹரின்(44) என்பவர், 13/2019 இலக்கம் கொண்ட பொதுநிருவாக சுற்றறிக்கை அபாய அணியும் உரிமையை மறுப்பதாக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தினகரன்/ வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435