அம்பலங்கொட மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

அம்பலங்கொட மீன்பிடித்துறைமுகத்தில் மணல் சேர்ந்திருப்பதால் தமது தொழிலுக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாக கூறி துறைமுகத்துக்கு முன்பாக அப்பிரதேச மீனவர்கள் ஆர்பாட்டமொன்றை ​மேற்கொண்டுள்ளனர்.

சுமார் 200 மீனவர்கள் கலந்துகொண்டுள்ள இவ்வார்ப்பாட்டத்தில் மணல் அகற்றுவதற்கான உபகரணங்கள் தம்மிடமில்லாத காரணத்தினால் துப்புறவு பணியை மேற்கொள்ள முடியாதுள்ளது என்று அம்மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

துறைமுகச்சுற்றுச்சூழலில் மணல் நிறைந்திருப்பதனால் படகுகளை கடலுக்கு கொண்டு செல்வதில் சிரமம் நிலவுவதாக சுட்டிக்காட்டியுள்ள அம்மீனவர்கள் தமது தொழிலை தடையின்றி மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு தெரிவிப்பதற்காக இவ்வார்ப்பாட்டத்தை மேற்கொண்டதாகவும் தெரிவித்தனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435