அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் போக்குவரத்து அமைச்சரின் அறிவித்தல்

அனைத்து அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைகளுக்கு இரண்டு மாத காலத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா தந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொழிற்சங்கங்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுக்கும் போது அரசாங்கம் எடுக்கின்ற தீர்மானங்களை சிலர் தவறான முறையில் பாவித்து அரசாங்கத்தினை பலவீனப்படுத்த முயற்சிகளை மேற்கொள்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது போன்ற விடயங்கள் கடந்த ரயில்வே தொழிற்சங்க போராட்டம், தனியார் பேருந்து சங்க போராட்டங்களிலும் இடம்பெற்றுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ரயில்வே தொழிற்சங்கத்தினரது பிரச்சினைகள் உட்பட அனைத்து அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைகளுக்கு இரண்டு மாத காலத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435