அரச ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவுப்படி

வாழ்க்கைச் செலவு சுட்டெண்ணுக்கு அமைய அரச ஊழியர்களுக்கு வாழ்க்கை செலவுப் படியை வழங்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் பாராட்டுக்குரியது என்று தொழிற்சங்கங்கள் பாராட்டியுள்ளன.

இவ்வாழ்க்கை செலவுப் படி அதிகரிப்பினூடாக மாதாந்தம் கணிசமான அளவு சம்பள உயர்வை அரச ஊழியர்கள் பெறுவர். இது மகிழ்ச்சிக்குரிய விடயம். வரவுசெலவு திட்டங்களில் சம்பள உயர்வு வழங்கப்படுவதற்குப் பதிலாக கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை அடிப்படையாக கொண்டு வாழ்க்கைச் செலவுபடியை வழங்க தீர்மானித்துள்ளார் ஜனாதிபதி. அவரும் அரச ஊழியராக இருந்தவர் என்பதனால் அரச ஊழியர்களின் கஷ்டம் அவருக்குப் புரிந்திருக்கிறது. இது தீர்மானம் அரச ஊழியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன

மூலம்- தினகரன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435