அரச ஊழியர்களுக்கு 25 மாடிகளைக் கொண்ட தொடர்மாடி குடியிருப்பு

அரச ஊழியர்களுக்காக 5இ500 மில்லியன் ரூபா செலவில் பொறளை – வனாத்தமுல்ல  பகுதியில்  நிர்மாணிக்கப்பட்டுள்ள ஓவல் வியூவ் தொடர்மாடிக் குடியிருப்பு எதிர்வரும் 5 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

25 மாடிகளைக் கொண்ட  இந்த தொடர்மாடிக் குடியிருப்பில் 608 வீடுகள் உள்ளன.

மூன்று படுக்கை அறைகளைக் கொண்ட 304 வீடுகளும்இ இரண்டு படுக்கையறைகள் கொண்ட 304 வீடுகளும் இதில் உள்ளன.

வாகனத் தரிப்பிடம், சிறுவர் பூங்கா, உடற்பயிற்சி நிலையம், சந்தைத் தொகுதி, நீச்சல் தடாகம் உள்ளிட்ட வசதிகளும் இந்த தொடர்மாடி குடியிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

15 முதல் 20 ஆண்டுகளாக பொது சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த வீடுகளை வாங்கியுள்ளதாகவும், சலுகை கட்டண திட்டத்தின் கீழ் கடன் வசதிகளுடன் இந்த வீடுகளை அவர்கள் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435