அரச – தனியார் புரிந்துணர்வு ஒத்துழைப்பு கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை

இலங்கையில் அரச – தனியார் புரிந்துணர்வுக்காக ஒத்துழைப்பை வழங்குவதற்கு தேவையான வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அரச தனியார் புரிந்துணர்வுக்கு ஒத்துழைப்பை வழங்குவதற்கென தேவையான கட்டமைப்பொன்றை மேம்படுத்துவதற்கும், அதற்கு தேவையான அடிப்படை வசதி நிதியளித்தல் ஆகியவற்றுக்கு உலக வங்கியின் மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியிடம் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இது தொடர்பிலான இணக்கப்பாட்டு பேச்சுவார்த்தையை நடத்துவதற்கும் சம்பந்தப்பட்ட உடன்படிக்கையை எட்டுவதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435