அரச நிர்வாக சேவை – முரண்பாடு தொடர்பில் விசாரணை

அரச நிர்வாக சேவை ஆட்சேர்ப்புக்கான திறந்த பரீட்சை வினாத்தாளின் சில வினாக்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலை குறித்து விசாரணைகளை மேற்கொள்ள பரீட்சைகள் திணைக்களம் தயாராகி வருகிறது.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் விடுத்து பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அரச நிர்வாக சேவை ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சையானது 5 வினாத்தாள்களைக் கொண்டதாகும்.

அதன் ஒரு வினாத்தளில் உள்ளடக்கப்பட்டிருந்த வினாக்கள் மற்றுமொரு வினாத்தாளில் உள்ளடக்கப்பட்டிருந்தாக கல்வி அமைச்சுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இதன அடிப்படையாகக் கொண்டே விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435