அரச நிர்வாக சேவை III – வினாத்தாள் முன்கூட்டியே வெளியிடப்படவில்லை

அரச நிர்வாக சேவையின் மூன்றாம் தரத்துக்கு ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டிப் பரீட்சை வினாத்தாள் முன்கூட்டியே வெளியிடப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தாம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர், பரீட்சைக்குத் தோற்றியவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரச நிர்வாக சேவை ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சையானது 5 வினாத்தாள்களைக் கொண்டதாகும்.

அதன் ஒரு வினாத்தளில் உள்ளடக்கப்பட்டிருந்த வினாக்கள் மற்றுமொரு வினாத்தாளில் உள்ளடக்கப்பட்டிருந்தாக கல்வி அமைச்சுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் கல்வி அமைச்சரின் உத்தரவுக்கமைய, விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435