அரச நிறுவனங்களுக்கு 3000 மொழி அதிகாரிகள் அவசியம்

மும்மொழி அமுலாக்கல் கொள்கையை நடைமுறைப்படுத்த அரச நிறுவனங்களுக்கு சுமார் 3000 அதிகாரிகளை நியமிக்கவேண்டும் என்று தேசிய நல்லிணக்கத்துறை அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த கோரிக்கையை அரசாங்கத்திடம் தாம் முன்வைத்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த அதிகாரிகளை நியமிக்காது மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது கடினமான பணியாகவே இருக்கும் என்று அவர் ஊடகம் ஒன்றுக்கு கூறியுள்ளார்.

கல்விப்பொதுத்தராதர உயர்தர சித்திகளுடன் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புலமைப்பெற்றவர்கள் இந்த பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ளனர்

இதேவேளை, நியமனங்களின் பின்னர் இவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி- தழிழ் வின்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435