அரச நிறைவேற்று அதிகாரிகள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

அரச நிறைவேற்று அதிகாரிகளுடைய சம்பள பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருவதாக விடய பொறுப்பு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார உறுதியளித்துள்ளார் என்று அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த சங்கத்தின் தலைவர் நிமல் கருணாசிரி தெரிவித்துள்ளார்.

நேற்று (4) சுகயீன விடுமுறை போராட்டத்தை குறித்த சங்கம் முன்னெடுத்திருந்த நிலையில் அமைச்சர் இவ்வுறுதி மொழியை வழங்கியுள்ளார். எனினும் தாம் ஏற்கனவே திட்டமிட்ட சுகயீன விடுமுறை போராட்டம் இன்று (05) காலை வரையும் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச நிறைவேற்று அதிகாரிகளின் சம்பள பிரச்சினையை தீர்க்குமாறு கோரி நேற்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்தனர். அத்துடன் அரச நிருவாக அமைச்சின் முன்பாக போராட்டமொன்றையும் முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435