அரச முகாமைத்துவ சேவைக்கு புதிதாக 6000 பேர் இணைப்பு

அரசாங்க முகாமைத்துவ சேவைக்கு புதிதாக 6000 பேரை இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக அரச நிருவாக அமைச்சின் ஒன்றிணைந்த சேவை பணிப்பாளர் நாயகம் திருமதி கே.பி.எம். ஜே, கமகே தெரிவித்துள்ளார்.

அதற்கமைய கடந்த வருடம் நடாத்தப்பட்ட திறந்த மற்றும் மட்டுப்படுத்திய போட்டிப்பரீட்சைகளில் தோற்றி சிறந்த புள்ளிகளை பெற்றவர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 5ம் திகதி நேர்முகத்தேர்வு நடாத்தப்படவுள்ளது.

நேர்முகத்தேர்வின் பின்னர் தகுதி பெற்றவர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் பணிப்பாளர் நாயகம் திருமதி கே.பி.எம். ஜே, கமகே தெரிவித்துள்ளார்.

மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் தோற்றிய 1477 அதிகாரிகளும் திறந்த போட்டிப் பரீட்சையில் தோற்றிய 3905 பேரும் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435