அரச முகாமைத்துவ சேவையில் விரைவில் 3000 பேர் இணைப்பு

அரச முகாமைத்துவ சேவையில் இந்த வருடத்தில் புதிதாக 3000 இற்கும் அதிகமானோர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் இச்செய்தியை வௌியிட்டுள்ளது.

அதற்கமைய, போட்டிப் பரீட்சை எதிர்வரும் 22 , 23 ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது.

இம்முறை அரச முகாமைத்துவ உதவியாளருக்கான போட்டிப்பரீட்சையில் தோற்ற ஒரு இலட்சம் விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்துள்ளனர் என்றும் பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் ஏற்கனவே தபாலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் நடத்தப்படவிருந்த குறித்த பரீட்சை மோசமான காலநிலை காரணமாக பிற்போடப்பட்டது.

பரீட்சை நடத்தப்பட்டு இரு மாதங்களுக்குள் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு முகாமைத்துவ சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435