ஆசிரியர் அதிபர்கள் 13ம் திகதி சுகயீன போராட்டம்

ஆசிரியர்கள் மற்றம் அதிபர்கள் எதிர்வரும் 13ம் திகதி நாடு முழுவதும் சுகவீன விடுமுறையைப்பதிவு செய்து போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

தமது சங்கத்தினர் கல்வி அமைச்சின் அலுவலகத்துக்கு முன்னால் நடத்திய போராட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்தபோராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஆசிரியர்களது வேதனப்பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என்று அந்த சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கல்வி அமைச்சின் முன்னால் நேற்று நடத்தப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் நடத்திய தாக்குதலில் இரண்டு ஆசிரியர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435