ஆசிரியர் நியமனம் பெறும் 494 பட்டதாரிகள்

சப்ரகமுவ மாகாண பட்டதாரிகள் 494 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு நாளை (04) மாகாணசபை கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளது.

கடந்த 2018 ஜூன் மாதம் 22ம் திகதி மாகாணசபையினூடாக இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களைச் ​சேர்ந்த பட்டதாரிகளிடமிருந்த கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கமைய, 2019 மார்ச் மாதம் 31ம் திகதி நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்களே ஆசிரியர்களாக நியமங்களை பெறவுள்ளனர் என்று மாகாண கல்வியமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ். வீரசூரிய தெரிவித்துள்ளார்.

மாகாண ஆளுநர் டிக்கரி கொப்பேகடுவவின் ஆலோசனைக்கமைய இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435