ஆசிரியர் பற்றாக்குறைக்கு வருட இறுதிக்குள் தீர்வு

இவ்வருட இறுதிக்குள் கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்படும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஏறாவூரில் நடைபெற்ற பாடசாலையொன்றில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று (10) நடைபெற்றபோது கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

உயர் டிப்ளோமாதாரிகள் மாத்திரமன்றி, பட்டதாரிகள், க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்தோர் என அனைவரையும் சேவையில் இணைத்து ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படவுள்ளது. கிழக்கு மாகாண கல்வி மேம்பாட்டுக்கு உறுதுணையாக இருப்பதுடன் எதிர்காலத்திலும் கல்வி உயர்வடைதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன் என்றும் அவர் இதன்போது உறுதியளித்துள்ளார்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435