EPF/ETF பாதிக்கும் அரச நடவடிக்கைக்கு இடமளிக்க முடியாது

ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி என்பவற்றுக்கு வேட்டு வைக்கும் வகையில் அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் துண்டுப் பிரசுரங்களை வழங்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரவுள்ள இறைவரிச் சட்டத்தில் மக்களின் ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி என்பவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சமரசங்க, அதற்கெதிராக தமது சங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435