ஆசிரிய ஆலோசகர்களுக்கான விண்ணப்பம் கோரல்

வட மத்திய மாகாணத்தில் உள்ள ஆசிரியர் ஆலோசகர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மாகாண கல்வித் திணைக்கள் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.

வட மத்திய மாகாண அரச சேவை ஆசிரியர்களிடமிருந்து குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் மாகாண கல்வியமைச்சு கோரியுள்ளது.

அரச ஆசிரியர் சேவையில் தரம் இரண்டு மற்றும் மூன்றில் உள்ளவர்களுக்கே இவ்வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் விண்ணப்பிப்போர் போட்டிப் பரீட்சையினூடாக தெரிவு செய்யப்படுவர் என்றும் கல்வித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

போட்டிப் பரீட்சை மற்றும் விடயம் தொடர்பான பரீட்சையில் விண்ணப்பதாரிகள் தோற்ற வேண்டும். ஆரம்ப நெறி, கணிதம், ஆங்கிலம், தொழில்நுட்பம், தொழில் வழிகாட்டல், சங்கீதம், நடனகலை மற்றும் விசேட கல்வி உள்ளிட்ட பாடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என்றும் வட மத்திய மாகாண கல்வித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435