ஆர்ப்பாட்டம் பிற்போடப்பட்டது

சம்பள முரண்பாட்டை நீக்குமாறு கோரி பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று (03) கொழும்பில் நடத்தப்படவிருந்த பாரிய ஆர்ப்பாட்டம் பிற்போடப்பட்டது.

உயர்கல்வியமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கும் கல்விசாரா ஊழியர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (02) முற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தை சுமூகமாக நிறைவடைந்ததையடுத்து இப்போராட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாட்டை நிவர்த்தி செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில் திரைசேரியின் அனுமதி எதிர்வரும் திங்கட் கிழமை (07) அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அது வரையில் தமது பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் தொடரும் என்றும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435