இடமாற்றப்பட்ட மருத்துவர், தாதியர்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை

இடமாற்றம் வழங்கப்பட்டு புதிய பணி இடங்களுக்கு சமூகமளிக்காத மருத்துவர்கள் மற்றும் தாதியர்களின் சம்பளத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள பெரும்பாலானோர், புதிய சேவை மையங்களுக்கு சமூகமளிப்பதை காலதாமதப்படுத்துவதாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே, அவர்களின் சம்பளத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இடமாற்றம் வழங்கப்பட்ட வைத்தியர்கள் மற்றும் தாதியர்களை அவர்களது உரிய பணியிடங்களுக்கு அனுப்பாமல் வைத்திருக்கும் வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435