இடைக்கால கொடுப்பனவு கோரி சென் கூம்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

இருமாதங்கள் நிலுவையிலுள்ள 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவை வழங்குமாறு கோரி லிந்துள்ள சென்கூம்ஸ் தோட்டத் தொழிலாளர்கள் இன்று (24) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை தேயிலைச் சொந்தமான சென்கூம்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 500 தொழிலாளர்கள் தோட்ட அதிகாரி சரத் அபேசிங்கவின் அலுவலகத்திற்கு முன்பாக இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனடியாக 1000 ரூபாவும் இன்னும் இருவாரங்களில் மேலதிக தொகையையும் வழங்குவதாக தோட்ட அதிகாரி தெரிவித்த போதிலும் அதனை ஏற்றுக்கொள்ளாமல் குறித்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்/ தமிழ் மிரர்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435