இடைக்கால கொடுப்பனவை வழங்க கம்பனிகளுக்கு நிதியுதவி

அரசு உறுதியளித்த தோட்டத் தொழிலாளர்களுக்கான இடைக்கால கொடுப்பனவை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இணை அமைச்சரவை பேச்சாளரும் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடக அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

கடந்த காலங்களில் உலகச்சந்தையில் தேயிலையின் விலை குறைவடைந்துள்ளமையினால் தோட்டக் கம்பனிகள் குறித்த சம்பள உயர்வை வழங்குவதில் சிரமங்கள் எதிர்நோக்குகின்றன என்பதை தெளிவாகிறது. இதற்கு தீர்வு காணும் பொருட்ட பெருந்தோட்ட கம்பனிகளுக்கு நிதியுதவி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை தேயிலை சபையூடாக அரச வங்கிகளிடம் கடன்களை பெற்றுக் கொள்வதற்கு திறைசேரி பிணைகளை வழங்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435