இருமாத நிலுவை சம்பளத்துடன் 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு

தோட்டத் தொழிலாளர்களுக்கான 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவினை 2 மாத நிலுவை சம்பளத்துடன் உடனடியாக வழங்க முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

நேற்று அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையைடுத்தே இவ்விணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

சம்பளம் வழங்குவதற்கான நிதியை வங்கிகளினூடாக வழங்க நிதியமைச்சு முன்வந்துள்ள நிலையில் இது தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் முதலாளிமார் சம்மேளனம் இன்று கைச்சாத்திடவுள்ளது.

இதற்கமைய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்துகும் வரையில் செல்லுபடியாகவுள்ள இவ்விடைக்கால கொடுப்பனவானது மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கும் சேர்ந்து வழங்கப்படவுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435