இலங்கைப் பெண் சவுதியில் சுட்டுக்கொலை

வீட்டுப்பணிப்பெண்ணாக சவுதி அரேபியாவில் பணியாற்றிய இலங்கை பெண் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். மனநோயாளியான சந்தேகநபரும் தன்னைத்தானே அதே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபரின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய 42 வயதான இலங்கைப் பெண்ணே வீட்டுக்குள் வைத்து இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை காலை (10) இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சந்தேகநபரான 30 வயதான சவுதிப்பிரஜை பின்னர் அதே துப்பாக்கியில் தனக்குத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் சடலம் தற்போது அல் ராஸ் பிரதேசத்தில உள்ள மோர்கு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சந்தேகநபர் மனநோயினால் பாதிக்கப்பட்டிருந்தவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் குவாஸ்ஸிம் பொலிஸ் பேச்சாளர் லெப்டினன்ட் பாதர் அஸ்ஸாபனி தெரிவித்துள்ளார்.

சவுதி கெசட்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435