இலங்கையில் கொரோனாவினால் 16ஆவது மரணம்

இலங்கையில் கொரோனா தொற்றினால் 16ஆவது மரணம் நேற்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (25) அதிகாலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உயிரிழந்த நோயாளி கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளி என உறுதி செயப்பட்டுள்ளதாக பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

மரணமான இந்த நோயாளி 70 வயதைக் கொண்ட ஆண் ஆவார். அத்தோடு கொழும்பு 02 பகுதியச் சேர்ந்தவர்.

கடந்த 23 ஆம் திகதி இவரது இரத்தத்தில் கிருமி நுழைந்ததினால் ஏற்பட்ட சிக்கலான நிலைமையின் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து ஏற்பட்ட நிலைமையின் காரணமாகவே நோயாளி உயிரிழந்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435