வர்த்தக – பொருளாதார ஒப்பந்த இறுதி கட்டம் விரைவில்

இலங்கை – இந்திய வர்த்தக பொருளாதார ஒப்பந்தம் (ETCA) தொடர்பில் கடந்த வாரம் நடத்தப்பட்ட முதற்கட்ட பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை. கே.சின்ஹா தெரிவித்தார்.

இந்தியாவில் 70ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் ஏற்பாடு செய்திருந்த விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் குறித்த ஒப்பந்தம் தொடர்பில் மேலதிக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இறுதி தீர்மானம் எட்டப்படும். உலக பொருளாதாரத்தில் பலம் பொருந்திய நாடாக இந்தியாக காணப்படுகிறது. இலங்கை இந்தியாவின் வெற்றிப்பயணங்களை உதாரணமாக கொள்ள வேண்டும். அதற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்க இந்திய அரசு தயாராக உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435