இலங்கையில் 13வது கொவிட் 19 தொற்று மரணம் பதிவாகியது

பஹ்ரைனில் இருந்து நாடு திரும்பி கொவிட் 19 தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் இன்று (14) இறந்துள்ளார். இதனையடுத்து கொரோனாவினால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்துள்ளது என அரசாங்கம் தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

60 வயதான குறித்த நபர் கடந்த 2ம் திகதி நாடு திரும்பியுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கப்பலில் பணியாற்றி வந்துள்ள அந்நபர் நுகேகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் இருதய நோய் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் என்றும் குறிப்பிடப்படுகிறது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435