இலங்கையில் 22வது கொரோனா தொற்று மரணம்!

இலங்கையில் கொரோனா நோய் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் நேற்று உயிரிழந்தள்ளார்.

இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் கடந்த 31ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்த நோயாளியின் பிரேத பரிசோதனையில் அவர் கொவிட் நோய் தொற்றுக்குள்ளானவர் என்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாக தொற்று நோயியல் பிரிவு சற்று முன்னர் அறிவித்தது.

உயிரிழந்த நபர் 27 வயது ஆண் ஆவதுடன் பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர். அத்துடன் இந்த மரணம் தற்கொலை முயற்சியினால் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

இது 22ஆவது கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவரின் மரணமாக தொற்று நோயியல் பிரிவு உறுதிசெய்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435