இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவராக நவீன்

ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் புதிய தலைவராக நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அச்சங்கத்தின் பொதுச் செயலாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (12) இடம்பெற்ற இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை தேசிய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்த ஹரீன் பெர்ணாண்டோ மற்றும் வடிவேல் சுரேஸ் ஆகியோர் சஜித் பிரேமதாசாவின் அணியில் இணைந்துகொண்டுள்ளமையினால் அப்பதவிகளுக்கு புதியவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களுக்கான கூட்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435