தொடரூந்து தொழிற்சங்கத்தினர் இரண்டு மணிநேர திடீர் பணிப்புறக்கணிப்பு

தொடரூந்து நிலைய அதிபர்கள், கட்டுப்பாட்டுர்ளுரு;கள் மற்றும் சாரதிகள் உள்ளிட்ட சில தொழிற்சங்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் இரண்டு மணித்தியாலங்களுக்கு திடீர் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டனர்.

தொடரூந்து திணைக்களத்திற்கு சொந்தமான காணி ஒன்று தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை முன்னிருத்தி இந்த குறுகிய நேர பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டதாக தொடரூந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பணிப்புறக்கணிப்பு பிற்பகல் 4.00 மணி வரை முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பணிப்புறக்கணிப்பு இடம்பெற்ற இரண்டு மணிநேர காலப்பகுதியில் கொழும்பு கோட்டை மற்றும் மருதானை முதலான தொடரூந்து நிலையங்களில் பயணத்தை ஆரம்பவிக்கவிருந்த தொடரூந்துகளின் சேவைகள் இடம்பெறவில்லை.

அத்துடன், சில தொடரூந்துகள் பயணத்தின் இடைநடுவிலேயே நிறுத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435