இலங்கை தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளும் சவால்களும்

இலங்கையில் உள்ள தொழிற்சங்களின் செயற்பாடு மற்றும் அவை முகங்ககொடுக்கும் செயற்பாடுகளும் போக்குகளும் தொடர்பில் தெளிவுபடுத்தும் நிகழ்வு எதிர்வரும் 21ம் திகதி ரேணுகா ஹோட்டல் கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது.

சொலிடாரிட்டி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படும் இத்தௌிவுபடுத்தல் நிகழ்வில்

• தொழிற்சங்க நடவடிக்கைகளில் இளைஞர் யுவதிகள் பங்களிப்பு வழங்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்த சர்வதேச அனுபவப் பார்வை

• நவீன பெண் தொழிலாளர்களின் பங்களிப்பும், இன்றைய சூழலில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இலங்கை தொழிற்சங்க செயற்பாடு- சவால்களும் முன்னேற்றங்களும்

ஆகிய தலைப்புகளில் ஆராயப்படவுள்ளதுடன் இளைஞர், யுவதிகள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் நடத்தப்படவுள்ள இந்நிகழ்வில் இலங்கையின் செயற்றிறன் மிக்க தொழிற்சங்கங்கள் கலந்துகொள்ளவுள்ளதுடன் தற்காலத்தில் தொழிற்சங்கங்களின் சவால்கள் மற்றும் அடைவுகள் தொடர்பிலும் பகிர்ந்துகொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435