இலங்கை மீனவர்களை விடுப்பது தொடர்பில் பேச்சுவார்தை ஆரம்பம்

இந்திய அரசினால் கைது செய்யப்பட்டுள்ள 24 இலங்கை மீனவர்களை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மீன்பிடித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண பிரதேசத்தில் இருந்து கடலுக்குச் சென்ற 18 மீனவர்களும் மாத்தறை பிரதேசத்தில் இருந்து கடலுக்குச் சென்ற 6 மீனவர்களுமாக 24 மீனவர்கள் தற்போது இந்திய அரசினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை மீட்பதற்கான பேச்சுவார்த்தையே தற்ச​போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இருநாடுகளின் வௌிவிவகார அமைச்சினூடாக இப்பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மீன்பிடித் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் லங்காதீப பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார் என அவ்விணையதளம் செய்தி வௌியிட்டுள்ளது.

இந்திய கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் இந்திய கடற்கரை பாதுகாப்பு அதிகாரிகளினால் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை அரசின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் மீன்பிடித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435