இலங்கை வங்கியாளர் சங்கத்தின் கோரிக்கை

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையைக் கருத்திற்கொண்டு வங்கிக்கு விஜயம் செய்யும் வாடிக்கையாளர்கள் பெரிய பைகள் மற்றும் பொதிகளை வங்கிக்குள் கொண்டு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு இலங்கை வங்கியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

அவசியம் ஏற்படின் உரிய சோதனை நடவடிக்கைகளை வங்கி மேற்கொள்ளும் என்று அறிவித்துள்ள அச்சங்கம் சோதனை நடவடிக்கைகளின் போது அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் சிரமத்தை ஏற்படுத்தும் ஜெக்கட்டுக்கள், தொப்பிகள், ஹெல்மட்டுக்கள் என்பவற்றை அணிந்து வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கோரியுள்ளது.

வாடிக்கையாளர்கள் தமது கொடுக்கல் வாங்கல்களை முடிந்தளவு இண்டர்நெட் மற்றும் மொமைபல் வங்கிச் சேவைகளினூடாக பூர்த்தி செய்துக்கொள்வது மிகச் சிறந்தது என்றும் அனைத்து வாடிக்கையாளர்களின் நன்மை கருதி மேற்கொள்ளும் இந்நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் இலங்கை வங்கியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435