இ.போ.சபையில் 1953 பேர் சுயவிருப்பில் ஓய்வு

சுய விருப்பின் அடிப்படையில் சேவையிலிருந்து விலகுவதற்கு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் இக்காலப்பகுதியில் 1953 பேர் சுயவிருப்பின் பேரில் ஓய்வுபெற்றுள்ளனர் என்று இலங்கை போக்குவரத்துச்சபை தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்தார்.

கடந்த ஜூன் மாதம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய விருப்பத்தின் பேரில் ஓய்வுபெற ஜூன் மாதம் கடைசி வரை அவகாசம் வழங்கப்பட்டது. மீண்டும் ஜூலை 31ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டது. ஜூலை மாதம் வழங்கப்பட்ட அவகாசத்தில்100 பேர் மட்டுமே இராஜினாமா கடிதத்தை கையளித்தனர்.

சேவை அடிப்படையில் சுய விருப்பின் பேரில் இராஜினாம செய்யவிருந்த 8000 பேருக்கு ஓய்வு வழங்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

அந்தவகையில் தற்போது கிடைத்துள்ள விண்ணப்பங்களின் அடிப்படையில், அவர்களுக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் நட்டஈட்டை பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435